Connect with us

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; 10- ம் வகுப்பு மாணவி காதலனுடன் சேர்ந்து எடுத்த பகீர் முடிவு..!!

    Tirupur love pair

    Tamil News

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; 10- ம் வகுப்பு மாணவி காதலனுடன் சேர்ந்து எடுத்த பகீர் முடிவு..!!

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Tirupur love pair

    திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் அருகே வெங்கமேடு ஆத்துப்பாளையம் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றில் நேற்று காலை ஒரு இளம்பெண் உடல் பிணமாக மிதந்துள்ளது.

    அந்த பகுதி வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் செட்டிபாளையம் விஏஓ-வுக்கு தகவல் கொடுத்தனர்.

    அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு கிணற்றின் அருகே ஆண் ஒருவரது காலணிகளும், கிணற்றின் உள்ளே பெண் ஒருவரது சடலமும் மிதந்து கொண்டிருந்ததை கண்டனர்.

    உடனடியாக தீயணைப்புதுறையினர் வரவழைக்கப்பட்டு இளம்பெண்ணின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    சிறிது நேரத்தில் தீயணைப்புத்துறையினரின் தேடுதலில் ஒரு ஆண் உடல் இறந்த நிலையில் மீட்டனர்.

    அப்போது அந்த வாலிபரின் பேண்ட் பாக்கெட்டில் ஒரு செல்போன் இருந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் பதிவு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தினர்.

    இதில் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் திருப்பூரை அடுத்த அவினாசி கைகாட்டிபுதூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் அஜய் (வயது 23) என்பது தெரியவந்தது.

    அஜயும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகளான ஹர்ஷினியும் (15) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    ஹர்ஷினி அவினாசியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் இருவரது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததையடுத்து 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காதல் ஜோடியை கடுமையாக எச்சரித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஹர்ஷினி அஜயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார்.

    அதில், வீட்டில் பெற்றோர் திட்டுவதால் வாழவே பிடிக்கவில்லை என்றும், வந்து என்னை அழைத்து சென்றுவிடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து அஜய் ஹர்ஷினியை வீட்டில் இருந்து அழைத்து சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!