Tamil News
பெற்றோரின் கவனக்குறைவு; தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 1½ வயது குழந்தை உயிரிழந்த சோகம்..!
கொல்லம் அருகே தண்ணீர் என நினைத்து மண் எண்ணெய்யை குடித்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் பையாலக்காவு பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணபிள்ளை. இவருடைய மனைவி ரேஷ்மா.
இவர்களுக்கு ஆருஷ் என்ற 1½ வயது குழந்தை உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணபிள்ளை அப்பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
அனைவரும் மதியம் சாப்பிட்டு விட்டு வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை ஆருஷ் தவிழ்ந்து அருகில் உள்ள அறைக்குச் சென்றிருக்கிறான்.
அங்கு ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் வைக்கப்பட்டிருந்தது.
அதனை தண்ணீர் என நினைத்து ஆருஷ் குடித்ததாக தெரிகிறது.
இதையடுத்து ஆருஷ் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை மண்ணெண்ணெய் குடித்தது பரிசோதனையில் தெரியவந்தது.
தொடர்ந்து ஆருஷ்க்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
