Tamil News
கத்தி முனையில் பிரபல நடிகையை மிரட்டி ஆடைகளை களைந்து, செல்போனில் ஆபாச படம் எடுத்த இளைஞர்கள்; அதிர்ச்சியில் நடிகை செய்த செயல்..!!
சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்து, நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம், ஏ.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் சினிமா துணை நடிகையாக உள்ளார்.
இவர் நேற்று வளசரவாக்கம் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார்.
அந்த புகாரில்,
நேற்று முன் தினம் இரவு என் யாரோ வீட்டின் கதைவை தட்டினார்கள்.
நான் கதவை திறக்கும்போது, அதிரடியாக 2 இளைஞர்கள் என் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதனையடுத்து, என்னை அவர்கள் என் ஆடைகளை களையச் சொல்லி அதட்டி மிரட்டினார்கள்.
அப்போது, நான் பயந்துபோய் என் ஆடைகளை களைத்தேன்.
அப்போது, அதை அவர்கள் செல்போன் மூலம் படமெடுத்துக் கொண்டு, என் வீட்டில் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய், நான் அணிந்திருந்த 10 கிராம் தங்க நகைகளை பறித்து விட்டுச் சென்று விட்டார்கள் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்கள்.
அந்த கேமராவில் இரண்டு இளைஞர்கள் அவ்வழியாக தப்பித்துச் சென்றது பதிவாகியிருந்தது.
இதன் பின்பு, கொள்ளையில் ஈடுபட்ட அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில் கண்ணதாசன் ஏற்கனவே விஜயலட்சுமிக்கு பழக்கமான நண்பர் என்பதால் அவரது வீட்டிற்கு அடிக்கடி மீன் இறைச்சி தேவை என்பதால் கொண்டு சென்று கொடுத்து வந்துள்ளார்.
மீன் கொடுக்க வரும்போதெல்லாம் வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்டுள்ளார்.
எனவே அவரிடமிருந்து நகை, பணத்தை பறிக்க வேண்டும் என்ற நோக்கில் சம்பவத்தன்று கண்ணதாசன் தனது நண்பரான செல்வகுமாரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது விஜயலட்சுமி கதவை திறந்தபோது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விஜயலட்சுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பிறகு நடந்ததை வெளியில் செல்லாமல் இருப்பதற்காக விஜயலட்சுமியை செல்போனில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து கொண்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
