Connect with us

    கள்ளக்காதலனுக்காக மனைவி செய்த கொடூர செயல்; சுருண்டு விழுந்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்…!

    illegal love pair

    Viral News

    கள்ளக்காதலனுக்காக மனைவி செய்த கொடூர செயல்; சுருண்டு விழுந்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்…!

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக கணவருக்கு மோரில் விசம் வைத்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    illegal love affair

    ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கே.கங்கவரம் மண்டலத்தை சேர்ந்த பாலாந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலா சுப்பாராவ்.

    இவருக்கும் கசுலூரு மண்டலம் அப்புமில்லி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்கிற வெங்கட லட்சுமிக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது.

    இந்நிலையில் கணவன்மீது மனைவி வெங்கட லட்சுமிக்கு நாட்டம் குறைந்தது.

    மேலும், அதே பகுதியை சேர்ந்த உசிறி ஸ்ரீனிவாஸ் என்பவர் மீது வெங்கடலட்சுமிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

    நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

    இது வெங்கட லட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட லட்சுமி, இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என அஞ்சினார்.

    எனவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

    இதனால் கடந்த ஜூன் 1ஆம் தேதி கணவனுக்கு மோரில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.

    மோர் குடித்து விட்டு உறங்கச் சென்ற கணவன் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

    காலையில் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மனைவி வெங்கடலட்சுமி கதறினார்.

    இதை உண்மை என்று சுப்பாராவின் உறவினர்களும் நம்பினர்.

    ஆனால் கணவன் உயிரிழந்த மூன்றே மாதங்களில் வெங்கடலட்சுமி அதிக மகிழ்ச்சியாக இருந்தார். சீனிவாஸ்வுடன் முன்பைவிட அதிக நெருக்கம் காட்டத் தொடங்கினார்.

    இந்நிலையில் தான் சுப்பாராவின் குடும்பத்தாருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    தங்களது மகனை வெங்கடலட்சுமி கொலை செய்திருக்கக் கூடும் என சுப்பராவின் பெற்றோர் சந்தேகித்தனர்.

    இதையடுத்து வெங்கடலட்சுமி மீது போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வெங்கடலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் வெங்கடலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக தகவல் கொடுத்தார்.

    இதில் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது, பின்னர் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததில் கள்ளக்காதலனுக்காக, கணவனுக்கு மோரில் தூக்க மாத்திரை கொடுத்து கொன்றதை வெங்கடலட்சுமி ஒப்புக்கொண்டார்.

    பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!