Tamil News
கணவரின் ஒர்க்சாப்பில் வேலைக்கு சேர்ந்தவரை கட்டிலுக்கு அழைத்த இளம்பெண்; அதன்பின் நடந்த பகீர் சம்பவம்..!..!
கள்ள காதலுக்காக கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புளியங்குளத்தில் முத்துராமலிங்கம் (45) என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த வருடம் மின்வாரிய துறையில் வேலை கிடைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிலையத்தின் அருகே பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து முத்துராமலிங்கத்தின் உறவினர் ஒருவர் அவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி திருச்சுழி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதாவிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது சுனிதா கேரளாவை சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவியாவார்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக சுனிதா அவருடைய மகள் அன்னபூரணியுடன் புளியங்குளத்துக்கு வந்துள்ளார்.
அதன் பிறகு முத்துராமலிங்கத்தை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் முத்துராமலிங்கத்திற்கு வேலை கிடைப்பதற்கு முன்பாக அவர் ஒர்கஷாப் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்த கடையில் வேலைப்பார்த்த மலையரசன் (25) என்பவருடன் சுனிதாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவரம் முத்துராமலிங்கத்திற்கு தெரிய வரவே சுனிதாவை அவர் பல முறை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுனிதா மலையரசனிடம் தன்னுடைய கணவரை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார்.
இதன் காரணமாக மலையரசன் மற்றும் அவருடைய நண்பர் சிவா ஆகிய 2 பேரும் சேர்ந்து கொடூரமான முறையில் முத்துராமலிங்கத்தை அடித்து கொலை செய்துள்ளனர்.
அதன்பிறகு சுனிதாவின் ஆலோசனையின் படி முத்துராமலிங்கத்தின் உடலை சாலையில் வீசிவிட்டு விபத்து நடந்தது போல் நாடகமாடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதன் காரணமாக சிவா, மலையரசன் மற்றும் சுனிதா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
