Connect with us

    மகளின் காதலனோடு சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய பெண்; ஏன் தெரியுமா? திடுக்கிட வைக்கும் ஷாக் தகவல்..!

    Wife kills husband

    Tamil News

    மகளின் காதலனோடு சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய பெண்; ஏன் தெரியுமா? திடுக்கிட வைக்கும் ஷாக் தகவல்..!

    கடலூர் மாவட்டத்தில் 50 வயதான சண்முகம் மற்றும் 48 வயதான சசிகலா என்ற மனைவியும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    Wife kills husband

    இவர்கள் இருவருக்கும் இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளார்கள். மூவரும் சேலத்தில் அமைந்துள்ள அவர்களது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சண்முகத்திற்கும் சசிகலாவிற்கும் தகராறு எழுந்துள்ளது.

    இதனால் சசிகலாவை வெளியில் வைத்து பூட்டி விட்டு சண்முகம் உறங்கியுள்ளார். வெளியில் அவர்களது மினி வேன் ஒன்றில் உறங்கியுள்ளார் சசிகலா.

    இருந்தாலும் சண்முகத்தின் மீது உள்ள கோபத்தினால் தனது மகளின் காதலனின் உதவியோடு பின் வாசல் வழியாக இருவரும் உள்ளே சென்று சண்முகத்தை வெட்டி கொலை செய்து விட்டார்கள்.

    பின்னர் ஒன்றும் தெரியாதது போல வெளியில் உள்ள மினி வேனில் படுத்து தூங்கியுள்ளனர்.

    காலையில் விடிந்தவுடன் வீட்டின் கதவை கணவர் திறக்கவில்லை என்றும் உள்ளே கணவன் வெட்டு காயங்களுடன் உள்ளதாகவும் காவல் நிலையத்திற்கு அவரே தகவல் அளித்தார்.

    காவல்துறையினர் அங்கு வந்து பார்த்த போது சண்முகம் உடல் முழுவதும் வெட்டு காயங்களோடு இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து காவல்துறையினருக்கு சசிகலா மீது சந்தேகம் ஏற்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் சசிகலா நடந்தவற்றை கூறியுள்ளார்.

    மேலும் சசிகலா காவல்துறையினரிடம் அளித்த வாக்கு மூலத்தில் சண்முகத்திற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் வாங்கும் சம்பளத்தில் அந்த பெண்ணிற்கு அதிக செலவுகளை செய்வதால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும், மேலும் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

    விசாரணைகளின் முடிவில் சசிகலாவும் அவரது மகளின் காதலன் தமிழ்வாணன்(22) என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!