Tamil News
கள்ளக்காதலனுடன் கட்டிலில் உல்லாசம் அனுபவித்த மாமியார்; நேரில் பார்த்த மருமகளுக்கு நேர்ந்த பரிதாபம்..!!
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியில் வசித்து வருபவர் வைஷ்ணவி. அவர் தற்போது பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து வைஷ்ணவி மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அவரது மாமியாருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளது.
அந்த நபர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த மருமகள் இதுகுறித்து மாமியாரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நபர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வைஷ்ணவி அவரை தடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர் வைஷ்ணவியின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முகமெல்லாம் வீங்கி வைஷ்ணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் வேலைக்கு சென்ற பிறகு எனது மாமியார் என்னை அறையில் வைத்து பூட்டி விடுவார்.
தண்ணீர் கேட்டால் கூட டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என கூறுவார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பதிவு வைரலான நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பலரும் வைஷ்ணவிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
