Tamil News
“கல்யாணம் ஆகி 4 மாசம் ஆச்சு; என் புருஷன் என்னை ஒரு தடவை கூட தொடல” – காவல் நிலையத்தில் கதறிய இளம்பெண்…!
இந்தூர் நேரு நகரில் வசிக்கும் புதுமண தம்பதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் ஆனது முதல் கணவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது,
திருமணத்திற்கு பிறகு அந்த இளைஞனுக்கு பல்வேறு வியாதிகள் இருப்பது மனைவிக்கு தெரியவந்தது.
அதே நேரம் திருமணம் நடந்த கையோடு தேனிலவுக்கு சென்றனர்,
அந்த இடத்தில் கணவன் மனைவிக்கு இடையே எந்த விதமான உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை.
பல வியாதிகளுக்கு கணவன் மருந்து சாப்பிடுவதால் கணவனுக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருப்பதை அந்த பெண் அறிந்து கொண்டார்.
இதுகுறித்து மாமியார் ஷில்பா அண்ணி மேகனா, கணவனின் அண்ணன் நிக்கில் ஆகியோர் தன் தங்கள் மகனுக்கு வியாதி இருப்பதை மறைத்து தன்னைத் திருமணம் செய்து வைத்து விட்டனர் என அந்த பெண் குற்றம் சாட்டுகிறார்.
அதே நேரத்தில் திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு மாமியார் பெரிய தொகையை தனது பெற்றோரிடம் வரதட்சணையாக கேட்டதாகவும், 5 லட்சம் ரூபாயும் ஐம்பது பவுன் தங்கமும் கொடுத்த பின்னரே திருமணம் நடந்த தாகவும் அந்த பெண் கூறினார்.
பிறகு எப்படியோ ஏற்பாடு செய்து தனது பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும், ஆனால் அதன்பிறகும் அனைவரும் சேர்ந்து தன்னை கொடுமை செய்து வருவதாகவும், அந்தப் பெண் கவணன் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
திருமணம் நடந்து ஒரு வாரகாலம் மாமியார் வீட்டில் இருந்த போதும் தனது கணவரின் கை தன் மீது படவேயில்லை என்றும், தேனிலவுக்கு சென்ற போதுதான் அவர் தன்னுடன் உறவு கொள்ள முடியாது என்று மறுத்ததாகவும் அந்தப் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
தனிமையில் இருக்க அழைத்தபோதும் தனக்குள்ள பிரச்சனையை தன் கணவன் வெளிப்படையாக கூறியதாகவும், தனக்கு பல வியாதிகள் இருப்பதால் தன்னால் உறவு வைத்துக்கொள்ள முடியாது என கணவர் தெரிவித்ததாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளார்.
தனது தாய் வீட்டிற்கு சென்ற அந்தப் பெண் மும்பையில் தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
அவரது குடும்பத்தினரின் ஆதரவுடன் அந்த பெண் கணவன் மாமியார் வீட்டார் மீது புகார் கொடுத்துள்ளார்.
