Connect with us

    ரூ.1 கோடி சொத்தை ரிக்ஸா ஓட்டுநருக்கு உயில் எழுதி வைத்த பெண்; ஏன் தெரியுமா..??

    Viral News

    ரூ.1 கோடி சொத்தை ரிக்ஸா ஓட்டுநருக்கு உயில் எழுதி வைத்த பெண்; ஏன் தெரியுமா..??

    ஒடிசாவின் கட்டாக் நகரில் வசிப்பவர் 63 வயதான பெண் மினாட்டி பட்நாயக்.

    மினாட்டியின் கணவரும், மகளும் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதால், கட்டாக்கின் சுதாஹத் கிறிஸ்டியன்சாஹி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இவர் வசித்து வருகிறார்.

    இதே கட்டாக் நகரில் வசிப்பவர் ரிக்ஸா ஓட்டுநர் புத்தா சமால்.

    53 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளாக மினாட்டி பட்நாயக் குடும்பத்துக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார்.

    குறிப்பாக கடந்த ஆண்டு புற்றுநோயால் தனது கணவரான 70 வயதான கிருஷ்ண குமார் பட்நாயக்கை இழந்த பிறகும், அதற்கடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது 31 வயது மகள் கோமல் குமாரி ஒரு தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்த பிறகும் மினாட்டி மிகவும் மனம் தளர்ந்து போயுள்ளார்.

    என் மகள் படிக்கும் போது, ​​புத்தா தான் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வந்தார். என் கணவர் கடைசி வரை புத்தாவை நம்பினார்.

    எனது மகளின் மரணத்திற்குப் பிறகு, எனது மாமியாரோ அல்லது எனது பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எனது உடல்நலம் குறித்து விசாரிக்கவோ அல்லது எனது அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

    கடந்த 25 ஆண்டுகளாக புத்தா மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

    அவர்கள் இத்தனை வருடங்களாக எனக்கு மரியாதை அளித்து என் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.

    நான் ஒரு இதய நோயாளி மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இதனை சமாளிக்க உதவுவதும் அவர்கள் தான். புத்தாவின் மனைவி எனக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறார்.

    எனது சொத்தை ரிக்சா காரரிடம் ஒப்படைக்க முடிவு செய்தபோது, ​​என் உடன்பிறந்தவர்கள் மத்தியில் ஒருவித மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால், நான் உறுதியாக இருந்ததால், அவர்கள் எதிர்க்கவில்லை, என்றுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!