Uncategorized
“எனக்கு அவரோட வாழ பிடிக்கல; எனக்கு என் காதலன் தான் வேணும்” – திருமணம் ஆன பெண் செய்த விபரீத செயல்..!
திருமணத்திற்கு பிறகும் தனது காதலனை மறக்க முடியாததால், தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவனின் கதையை முடித்த பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ், வயது.30
இவரது மனைவி ஷில்பா, வயது. 27
திருமணத்துக்கு முன்பே, ஷில்பாவுக்கும், சந்தோஷ், 29 என்பவருக்கும் இடையே காதல் இருந்தது.
பெற்றோர் எதிர்ப்பால், மகேஷை திருமணம் செய்தார்.
திருமணத்துக்கு பின்னும், காதலனுடன் தொடர்பில் இருந்தார்.
அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறாரே என நினைத்த இந்த ஜோடி மகேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி காதலன் உதவியுடன் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, அவர் உடலை மாண்டியாவுக்கு காரில் கொண்டு சென்றார்.
அங்கு வலிப்பு நோயால் உயிரிழந்து விட்டதாக, கணவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.
மாமனார், மாமியார் பார்த்த போது, மகன் கழுத்தில் காயங்கள் இருந்தன.
இதனால், மாண்டியா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், மகேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இது குறித்து மனைவியிடம் போலீசார் ‘கிடுக்கிபிடி’ விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் ஷில்பா கூறுகையில்,
“எனக்கு கணவனுடன் வாழ விருப்பமில்லை. அதனால் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தேன். வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடினேன்” என, தெரிவித்தார்.
இதனால் ஷில்பா மற்றும் அவரது காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
