Tamil News
டிஎஸ்பி பணிக்கு தேர்வான டீக்கடைக்காரரின் மகள்; குவியும் பாராட்டுக்கள்..!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி தொகுதி- 1 தோ்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளா் பணிக்குத் தோ்வாகி உள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாபட்டியைச் சோ்ந்தவா் வீரமுத்து. இவரது மனைவி வீரம்மாள்.
இவா்கள், உள்ளூரில் டீக்கடை நடத்தி வருகின்றனா்.
இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இவா்களின் நான்கு மகள்களில் ஒருவா் பவானியா.
பள்ளிக் கல்வியை உள்ளூா் அரசுப் பள்ளிகளில் படித்த பவானியா, புதுக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முடித்தாா்.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தொகுதி- 1 தோ்வு எழுதி வெற்றி பெற்றாா்.
தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பணிக்குத் தோ்வாகி உள்ளாா்.
சிறிய கிராமத்தில் இருந்து முதல் முயற்சியிலேயே அரசுப் பணிக்கு தோ்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பவானியா கூறியது:
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் கிடைத்த புத்தகங்களைக் கொண்டு போட்டித் தோ்வுக்கு தயாராகி வந்தேன்.
2021-இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவுடன், சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சோ்ந்து பயிற்சி பெற்று வந்தேன்.
நிகழாண்டில் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்று, தமிழ்வழிக் கல்விக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பணி கிடைத்துள்ளது.
எனினும், குடிமைப் பணித் தோ்வு எழுதி வெற்றி பெறுவதே லட்சியம் என்றாா் பவானியா.
