Connect with us

    2-ம் குழந்தை பிறந்த 14வது நாளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அனாதையான ஆண் குழந்தை 😭😭👇👇

    Young woman

    Tamil News

    2-ம் குழந்தை பிறந்த 14வது நாளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அனாதையான ஆண் குழந்தை 😭😭👇👇

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் 2 ஆண்டுக்கு பிறகு கணவன் வீட்டிற்கு வந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Young woman

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ்.

    இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடால் ஷாலினி 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி மீண்டும் சானசந்திரம் கிராமத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இதற்கிடையில் என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை கணவன் வீட்டுக்கு வந்த 14வது நாளில் ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    அந்த தகவலின் பேரில் ஓசூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஓசூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழியும் விசாரித்து வருகிறார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!