Tamil News
புருசனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனிடம் ரூ.30 லட்சம் வரை கறந்த பெண்; திடீரென எடுத்த விபரீத முடிவு..
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சூரியகோடு முளங்குழியை சேர்ந்தவர் ஜான்சன் (40) பிளம்பராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சந்தியா (34)என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், சந்தியா தனது கணவன் ஜான்சனுக்கு தெரியாமல் அழகன்பாறை அருகே தட்டான்விளையை சேர்ந்த வர்க்கீஸ் என்பவரது மகன் ஆன்றோ பிரபிளின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இவரை திருமணம் செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக 30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
இதையடுத்து ஆன்றோ பிரப்ளின் நேற்று மாலையில் தனது தாயாருடன் சந்தியாவின் வீட்டுற்கு வந்து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இ துகுறித்து கணவன் மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் உறவினர்கள் சந்தியாவின் போனிற்கு அழைத்தபோது போன் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
வீடு பூட்டியிருத்ததை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகில் கட்டிலில் ஜான்சன் விஷமருந்திய நிலையிலும் சடலமாக இருந்தனர்.
இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடு பூட்டியிருத்ததை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகில் கட்டிலில் ஜான்சன் விஷமருந்திய நிலையிலும் சடலமாக இருந்தனர்.
இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில், மனைவி வேறொருவரை திருமணம் செய்வதாக கூறி பணம் வாங்கியதை அறிந்த ஜாண்சன் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
