Tamil News
ஊட்டிக்கு சுற்றுலா வந்த ஆந்திர பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..!
ஊட்டிக்கு சுற்றுலா வந்த ஆந்திர பெண் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வினிதா தன்னுடன் பணியாற்றும் 9 நண்பர்களுடன் சேர்ந்து உதகைக்குச் சுற்றுலா வந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இவர்களைச் சட்டவிரோதமாக கல்லட்டி ஆற்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அப்போது காட்டாற்று வெள்ளத்தில் வினிதா அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதைப்பார்த்த அரவது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் அவரது உடலை போலீஸார் இன்று மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
