Tamil News
காதலிக்காக தனது உயிரையே கொடுத்த காதலன் ; நெஞ்சை உலுக்கும் காதல் கதை..!!
தெலுங்கானா மாநிலம் ஜனகம மாவட்டம், வெங்கிரியாலாவைச் சேர்ந்த அரவிந்தின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர்.
இதன் மூலம் அனாதையாக வாழ்ந்து வரும் அரவிந்த், காவேரி என்ற இளம் பெண்ணை ஒருநாள் திடீரென சந்தித்தார். இந்த அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது.
இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தமது காதலை வளர்த்து வந்ததுடன் ஒருவரை ஒருவர் பிரிய முடியாது என்ற நிலையில் தமது காதலின் உச்ச நிலையில் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் அவர்களது காதலைஇளம்பெண்ணின் பெற்றோர் ஏற்காததால் காவேரி தற்கொலை செய்து கொண்டார். இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அரவிந்த் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.
மேலும் அரவிந்த் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.
இதனால் மனமுடைந்த அரவிந்த் தனது காதலியின் பிரிவை தாங்க முடியாமல் இனிமேல் என்ன செய்வது என்ற குழப்பத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதலியின் பிரிவை தாங்க முடியாமல் அரவிந்த் இந்த முடிவை எடுத்துள்ள சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
