Tamil News
தற்கொலை செய்வேன் என மிரட்டியதால்; நகைகளை அடகு வைத்து 3 லட்ச ரூபாய்க்கு பைக் வாங்கி கொடுத்த தாய்; அதிவேகமாக சென்று உயிரிழந்த மகன்..!!
சாலையின் தடுப்பில் மோதி இருசக்கர வாகனம் நிலைதடுமாறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே எழுத்தூரைச் சேர்ந்தவர் ராமநாதன், சித்ரா தம்பதி. இவர்களது மகன் பிரசாந்த்( 22 )
இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.7
இந்நிலையில் பிரஷாந்த் தனது தாய் சித்ராவிடம் தனக்கு கே.டி.எம் இருசக்கர வாகனம் வேண்டும் என கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவரின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பைக் வாங்கி தரவில்லை என்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி அடம் பிடித்தாராம்.
எனவே சித்ரா வேறு வழியின்றி தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 3 லட்ச ரூபாய்க்கு புதிதாக கே.டி.எம் இருசக்கர வாகனத்தை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
பின்னர் பிரசாந்த் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தொழுதூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரின் மீது மோதியது.
இந்த விபத்தில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த தாய் சித்ரா அங்கு சென்று சடலமாக கிடந்த தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.