Connect with us

    பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடம், ச.ப.லத்.தால் ரூ.7 லட்.சத்தை ப.றிகொ.டுத்த இளைஞர்…!!

    Viral News

    பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடம், ச.ப.லத்.தால் ரூ.7 லட்.சத்தை ப.றிகொ.டுத்த இளைஞர்…!!

    தமிழகத்தில் அண்ணன் மற்றும் தங்கை என நினைத்து இரண்டு பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமா.ந்த திருமணமான இளைஞனுக்கு  அவர்கள் கணவன், மனைவி என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அ.திர்ச்சியில் உ.றை.ந்.துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவரது மனைவி முத்துலட்சுமி. கார்த்திக் பேக்கரி நடத்தி வருகிறார்.

    இதையடுத்து தனது கடை போட்டோக்களை அவர் பேஸ்புக்கில் பதிவு செய்து பிரபலப்படுத்தி வந்தார்.

    இந்தநிலையில் சத்யா என்ற பெண் பேஸ்புக்கில் கார்த்திக்குடன் நண்பராக ரெக்வஸ்ட் தர அவரும் அதை ஏற்று கொண்டார்.

    பின்னர் இவரும் சேட் செய்ய தொடங்கிய போது சத்யா தனக்கு திருமணமாகவில்லை என கூறி கார்த்திக்கை காதல் வலையில் விழ வைத்தார்.

    அடுத்த நாளே போன் நம்பர் வாங்கி கார்த்திக்கிடம் பேசிய சத்யா, பிரசாந்த் என்பவரை தனது அண்ணன் என கூறி போனில் பேச வைத்திருக்கிறார்.

    அப்போது கார்த்திக்கிடம் பிரசாந்த், என்ன தம்பி எப்படி வியாபாரம் செல்கிறது என கேட்க நன்றாக போகிறது, இன்னொரு பேக்கரி ஆரம்பிக்கலாம் என ஐடியா இருக்கு என்றார்.

    உடனே பிரசாந்த், நான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். பல்லடத்தில் நல்ல பேக்கரியாக பார்த்து தருகிறேன்,

    என்னிடம் நம்பிக்கை இருந்தால் வாங்க, உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கு என கேட்க, தன்னிடம் ரூ 7 லட்சம் இருப்பதாக சொன்னார்.

    இதையடுத்து பிரசாந்தை நேரில் கூட சென்று பார்க்காமல் சத்யா மீது உள்ள சபலம் மற்றும் மோகத்தில் முன் பணமாக ரூ 4 லட்சத்தை பிரசாந்துக்கு அனுப்பினார்.

    பின்னர் ஒருநாள் சத்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவர் வீட்டுக்கே சென்றார் கார்த்திக்.

    அங்கு சத்யா மற்றும் பிரசாந்த்தை பார்த்து அ.திர்ச்சியடைந்தார், ஏனெனில் உண்மையில் அவர்கள் அண்ணன், தங்கை கிடையாது கணவன் மற்றும் மனைவி ஆவார்கள்.

    ஆனால் அவர்கள் அதனை வெளிகாட்டி கொள்ளாமல் அங்குள்ள ஒரு பேக்கரியை காட்டி விட்டு மீதி 3 லட்சத்தை வாங்கி கொண்டு கார்த்திக்கை அனுப்பி வைத்தனர்.

    அடுத்தநாள் கார்த்திக், சத்யா – பிரசாந்தை போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிச் ஆப்பில் இருந்தது, சத்யாவின் பேஸ்புக் கணக்கும் மு.ட.க்கப்.பட்டிருந்தது.

    இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்ற போது அங்கிருந்து காலி செய்து சென்றது தெரியவந்தது. அருகே விசாரித்த போது சத்யாவும், பிரசாந்தும் கணவன் மற்றும் மனைவி என தெரிந்ததும் அ.திர்ச்சியில் உறைந்து போனார்.

    பின்னர் மனைவி முத்துலட்சுமியிடம் உண்மையை கூறி கார்த்திக் க.ண்ணீர் விட்டு அ.ழுதார்.

    இதை தொடர்ந்து பிரசாந்த் – சத்யா மீது போலீசில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!