Tamil News
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்திய கொடூர இளைஞர்கள்; வெளியான அதிர்ச்சி வீடியோ..!
கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர்களின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள கிராமத்தை ஒரு சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் மது குடிப்பது போலவும், பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த சிறுமிக்கு வாலிபர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
பிறகு போலீசார் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி பற்ற வைத்து கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்கையா ( 22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி குடிக்கவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
